Sunday, December 23, 2012

நான் இரசித்த குறும்படங்கள் - 06

Tuesday, December 18, 2012

மனித அறிவை அளக்கும்



வயிரு,பாலுறுப்பு
இது ரெண்டும் இல்லாட்டி
பூமி சொர்கமா இருந்துருக்கும்

.............................................................................................................................................................

வருடம் தோறும் வயதுகள் வந்தாலும்,
பெண் ஒரு முறைதான்
வயதிற்கு வருகிறாள்

..........................................................................................................................................................


மனிதனின் தத்துவங்களையும்
மிஞ்சிவிடுகின்றன
மரங்களின் மௌனம்

....................................................................................................................................................

கடுகு சிறுத்தாலும் காரம் பெருசாமே,
கடுகு என்ன அவ்லோ காரமா? #டவுட்டு

 ...................................................................................................................................................

மனித அறிவை அளக்கும் கருவி
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எக்ஸாம் வைப்பதென்பதும் ஏமாற்றுவேலையே

 ............................................................................................................................................................

நாம பூமியில பொறக்காம
சனி கிரகத்துல பொறந்திருந்தா
நைட்ல 61 நிலாவ பாத்துருக்கலாம்

.................................................................................................................................................................

மழையில் மலரும் வண்ணப் பூ - குடை

...............................................................................................................................................................

மறக்காமல்
குடை எடுத்துப் போகும் நாட்களில்
தவறியும் பெய்வதில்லை மழை

...........................................................................................................................................................

காதலியின் பெயரை
கையில் எழுதிப்பார்த்துப்
பரவசப்பட்டுக்கொள்கிறது
பள்ளிக் காதல்

..........................................................................................................................................................

நகரத்தை போல் அல்லாமல்,
கிராமங்களில் மாலை ஆறு மணிக்கே
இரவு தொடங்கி விடுகிறது

.......................................................................................................................................................

கரண்டியில் சோறு சாப்பிடும் போது
நிறைவது வயிறு மட்டுமே

...........................................................................................................................................


எல்லா மேனேஜரும் சீட்ல உக்காரும்போது மூளையக்கலட்டி ஒரு ஓரமா வச்சுருவாங்க போல‌  #முடியல


Tuesday, December 11, 2012

யானை மல்லாந்து படுத்திருப்பது போல்...........


ஓசோன் படலத்துல ஓட்ட போட்டது
நீல் ஆம்ஸ்ரோங்ட ராக்கேட்னு
சின்னவயசுல நம்பிக்கிட்டு இருந்தேன்

 .................................................................................................................................................................

"படித்ததில் எனக்கு பிடித்தது,.
வியாபாரியுடன் நண்பனாக இரு.....
நண்பனிடம் வியாபாரியாக இருக்காதே.

....................................................................................................................................................................

வீரன் வீழலாம் ஆனால் பணியமாட்டான்
பைந்தமிழ் பழமொழி

 ..................................................................................................................................................................

அஞ்சினவனைத் தன் குஞ்சும் விரட்டும்
பைந்தமிழ் பழமொழி

 ...................................................................................................................................................................

பொதுவா எல்லா பொண்ணுங்களும் சொல்லுர வசனம்:
"நா மத்த பொண்ணுங்காமாதிரி
ஓவரா மேக்கப் பன்னுரதில்ல"

....................................................................................................................................................................

யானை மல்லாந்து படுத்திருப்பது போல் உள்ளது "ய" என்ற எழுத்து

....................................................................................................................................................................

பெண்: வேகமா நகம் வளரனும்னு ஆசைப்படுவாள்.
ஆண்: நகமே வளரக்கூடாதுனு ஆசைப்படுவான்
ஆனா ரெண்டுமே மாறித்தான் நடக்கும்

.................................................................................................................................................................

வேகமாக கூட்டல் கணக்கு போடக்கூடியவர்கள்
அதிகம் படித்திராத மலிகைக்கடைக்காரர்கள் என நினைக்கிறேன்

....................................................................................................................................................................

படித்ததில் பிடித்தது: கவிஞர்களின் சோம்பலுக்கு பிறந்திருக்கலாம் ஹைக்கூ

................................................................................................................................................................

இப்போது அணியப்படுகிற இந்த ஆடை என்பது
தோல்,மரவுரி,இலைதழை என்பதன் நவீன வடிவம் - வைரமுத்து

..............................................................................................................................................................

திறந்து மூடும் ஒரு அதிசய சிப்பிக்குள் இருக்கும்
கருப்பு முத்து அவள் கரு விழிகள்

................................................................................................................................................................

Wednesday, December 5, 2012

நான் இரசித்த குறும்படங்கள் - 02


நான் இரசித்த குறும்படங்களில் என்னைக் கவர்ந்த 3D காட்டூன் குறும்படம் இது "Heavenly Appeals"


எனது முந்தைய பதிவு
நான் இரசித்த குறும்படங்கள் - 01

Tuesday, December 4, 2012

இளமையில் கல், முதுமையில் ????????


தோல் காதுள்ள உயிரினங்கள் குட்டி போடும்
துளைக் காதுடையவை முட்டையிடும்
சிறுவயதில் தாத்தா சொல்லிக்கொடுத்தது

....................................................................................................................................................................

முன்ன மாதிரி
காதலன் இல்லாத பொண்ணுங்கல பாக்க முடியுரதில்ல,
அட்டு பிகரக்கூட விட்டுவைக்க மாட்டங்கிரங்கலே

......................................................................................................................................................................

 நகரத்து தொடர்மாடி வீட்டிலிருக்கும் எனக்கெல்லாம்
இயற்கையை ரசிப்பதென்பது
பூந்தொட்டியிலிருக்கும் செடியை ரசிப்பது மட்டுமே

 ...................................................................................................................................................................

தற்போது பிறக்கும் சில குழந்தைகளுக்கு, கருவிலிருக்கும் போதே பெயர் வைக்கப்பட்டு விடுகிறது.

......................................................................................................................................................................

சளி வடிக்கும் வெள்ளைக்காரன் - மெழுகுவத்தி

.....................................................................................................................................................................

நொடியில் மலர்ந்து பின் கருகும் பூ - தீக்குச்சி

.....................................................................................................................................................................

நிற்கும் போது மறையும் உட்காரும் போது மட்டும் உருவாகும் - மடி

.....................................................................................................................................................................

தொட்டில் போட்டு தாலட்டுவது போலுள்ளது
புகையிரதத்தில் தூங்கியபடி பயணிப்பது

......................................................................................................................................................................

ATM மட்டும் கண்டுபுடிக்காம இருந்திருந்தா 24மணி நேரமும் தொறந்துருக்குர BANKS சந்திக்கு சந்தி இருந்திருக்கும்

......................................................................................................................................................................

இளமையில் கல், முதுமையில் மண் 
.....................................................................................................................................................................

குழந்தைகள் மம்மி என அழைப்பது எதோ செல்லப்பிராணியை அழைப்பது போலுள்ளது

......................................................................................................................................................................

காற்றை கற்பழித்துத்தான் ஒரு நாடு வளரவேன்டுமென்பது கொடுமையிலும் கொடுமை

Sunday, December 2, 2012

நான் இரசித்த குறும்படங்கள் - 01




எனக்கு குறும்படங்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும், சில நிமிடங்களில் அதிக கதைகளை இப் படங்கள் பேசி விடுகின்றன், குறும்படங்களை தமிழர்கள் அதிகமாக கண்டுகொள்ளாத போதும், தமிழிலும் மிகச்சிறந்தக் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, இக் குறும்படங்களுக்கும் உலகெல்லாம் கோடிக்கானக்கான இரசிகர்கள் இருக்கும் அதேவேளை அக்கோடிக்கணக்கான இரசிகனில் நானும் ஒருவன். அதனால் நான் அதிகம் இரசித்த குறும்படங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன் அதில் முதலாவது இந்தக் குறும்படம்









Blogger Widgets