Tuesday, December 18, 2012

மனித அறிவை அளக்கும்



வயிரு,பாலுறுப்பு
இது ரெண்டும் இல்லாட்டி
பூமி சொர்கமா இருந்துருக்கும்

.............................................................................................................................................................

வருடம் தோறும் வயதுகள் வந்தாலும்,
பெண் ஒரு முறைதான்
வயதிற்கு வருகிறாள்

..........................................................................................................................................................


மனிதனின் தத்துவங்களையும்
மிஞ்சிவிடுகின்றன
மரங்களின் மௌனம்

....................................................................................................................................................

கடுகு சிறுத்தாலும் காரம் பெருசாமே,
கடுகு என்ன அவ்லோ காரமா? #டவுட்டு

 ...................................................................................................................................................

மனித அறிவை அளக்கும் கருவி
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எக்ஸாம் வைப்பதென்பதும் ஏமாற்றுவேலையே

 ............................................................................................................................................................

நாம பூமியில பொறக்காம
சனி கிரகத்துல பொறந்திருந்தா
நைட்ல 61 நிலாவ பாத்துருக்கலாம்

.................................................................................................................................................................

மழையில் மலரும் வண்ணப் பூ - குடை

...............................................................................................................................................................

மறக்காமல்
குடை எடுத்துப் போகும் நாட்களில்
தவறியும் பெய்வதில்லை மழை

...........................................................................................................................................................

காதலியின் பெயரை
கையில் எழுதிப்பார்த்துப்
பரவசப்பட்டுக்கொள்கிறது
பள்ளிக் காதல்

..........................................................................................................................................................

நகரத்தை போல் அல்லாமல்,
கிராமங்களில் மாலை ஆறு மணிக்கே
இரவு தொடங்கி விடுகிறது

.......................................................................................................................................................

கரண்டியில் சோறு சாப்பிடும் போது
நிறைவது வயிறு மட்டுமே

...........................................................................................................................................


எல்லா மேனேஜரும் சீட்ல உக்காரும்போது மூளையக்கலட்டி ஒரு ஓரமா வச்சுருவாங்க போல‌  #முடியல


No comments:

Post a Comment

Blogger Widgets